• ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி மாதம் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை 29 புள்ளி 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
• அந்த வகையில் ஜனவரியில் மொத்த நிலுவைத் தொகை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 783 கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
• இது கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 254 கோடி ரூபாயாக இருந்தது.
• மேலும் கடந்த 10 மாதங்களில் மட்டும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை 20 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
• நிபுணர்களின் கூற்றுப்படி, கொரோனா பேரிடருக்கு பிந்தைய ஆன்லைன் வர்த்தக எழுச்சி, கிரெடிட் கார்டு பயன்பாட்டிற்கு ஊக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.