தற்போதைய செய்திகள்

Farzi தொடரை மிஞ்சும் அளவில் கள்ள நோட்டு கடத்தல்..மடக்கி பிடித்த போலீஸ்

தந்தி டிவி

திருச்சி மணப்பாறை அருகே சுமார் 84 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் கார் ஒன்றில் கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், சொகுசு காரில் வந்த கும்பல் போலீசாரை கண்டு ஓட்டம்பிடித்தது. இந்நிலையில், அவர்களை துரத்திச் சென்ற போலீசார், கோவையை சேர்ந்த பார்த்த சாரதி, சதீஷ் சுந்தர் மற்றும் தங்கவேல் ஆகிய மூவரை கைது செய்தனர். தொடர்ந்து, மூவரிடம் இருந்து சுமார் 84 லட்சம் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை