தற்போதைய செய்திகள்

நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து - நீடிக்கும் சிக்கல் | coromandel express accident

தந்தி டிவி

ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிப்பதால், மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோரில், கடந்த 2ம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். இவற்றில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ளன. ஒரே உடல்களை பலர் உரிமை கோருவது, அடையாளம் காண முடியாத அளவுக்கு சில உடல்கள் சிதைந்துள்ளது போன்ற நடைமுறை சிக்கல் இருந்து வருகிறது. இதனால் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, இதுவரை 193 உடல்களில் இருந்து மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஒடிசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு