தற்போதைய செய்திகள்

திருவள்ளுவர் சிலை கல்வெட்டை மூடியதால் சர்ச்சை.. சிலை பீடத்தை அகற்றிய பாஜகவினர் - காங். எதிர்ப்பு

தந்தி டிவி

திருவள்ளுவர் சிலை கல்வெட்டை மூடியதால் சர்ச்சை.. சிலை பீடத்தை அகற்றிய பாஜகவினர் - காங். எதிர்ப்பு

கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை வளாக புனரமைப்பு பணிகளுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கடந்த 2009ஆம் ஆண்டு கருணாநிதி மற்றும் எடியூரப்பா மூலம் பெங்களூருவில் அல்சூர் ஏரிக்கரை பகுதியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.

சிலையை சுற்றி பீடம் அமைப்பதற்காக எடியூரப்பா பெயர் கொண்ட கல்வெட்டை மறைத்ததாக குற்றம் சாட்டிய பாஜகவினர், சம்பந்தப்பட்ட பகுதியை இடித்து அகற்றினர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், புனரமைப்பு பணிக்கு இடையூறு செய்வதாக பாஜகவினர் மீது குற்றம்சாட்டினர்.

மேலும் திருவள்ளுவர் சிலை வளாகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். 

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்