தற்போதைய செய்திகள்

வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி. புகைப்படம் - கேரள பாஜக தலைவர் கடும் கண்டனம்

தந்தி டிவி

கேரளாவில், வந்தே பாரத் ரயிலில், பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. புகைப்படங்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கேரளா சென்ற பிரதமர் மோடி, அங்கு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிலையில், வந்தே பாரத் ரயில் ஷோரனூர் ரயில் நிலையம் வந்த போது, பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீகண்டன் புகைப்படத்தை அவரது ஆதரவாளர்கள், ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் ஒட்டினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே