தற்போதைய செய்திகள்

காங். எம்.பி.ஜெகதீஷ் டைட்லர்..அதிரடி காட்டிய சிபிஐ

தந்தி டிவி

பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி முழுவதும் கலவரம் ஏற்பட்டது. டெல்லி ஆசாத் மார்க்கெட் அருகே சர்தார் தாகுர் சிங், பாதல் சிங், குருசரண் சிங் மூன்று சீக்கியர்களை உயிருடன் 1984, நவம்பர் 11-ஆம் தேதி எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ கடந்த 2005, நவம்பர் 22-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது. முன்னாள் எம்.பி ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதால் கலவர கும்பல் கடைகளுக்கு தீயிட்டு மூன்று சீக்கியர்களையும் உயிருடன் எரித்து கொல்ல காரணமாக அமைந்தது என, சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை பெருநகர தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்