தற்போதைய செய்திகள்

முன்னாள் MLA மீது புகார்..லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் கெடு

தந்தி டிவி

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யாவுக்கு எதிரான புகாரில், 2 மாதங்களில் விசாரணை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அரவிந்தாக்க்ஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன், தனது சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். சொத்து மதிப்பை மறைத்து போட்டியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரில் ஆரம்பகட்ட விசாரணை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணையை 2 மாதங்களில் முடிக்க, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி