தற்போதைய செய்திகள்

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷன்-பணத்தாசையால் பறிபோன ரூ10 லட்சம்..திண்டுக்கல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர், தன்னிடம் ஒரு கோடி ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருப்பதாகவும், அதனை மாற்றி தந்தால் கமிஷன் தருவதாகவும் ஷாஜகான் என்பவரிடம் கூறியுள்ளார். இதனையறிந்த ஷாஜகானின் நண்பர்கள் குணசேகரன் மற்றும் ராஜசேகர் ஆகியோர், ஒரு கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தால், 90 லட்சத்திற்கு 500 ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறியுள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட சக்திவேல், ஷாஜகானையும், அவரது நண்பர்களையும் திண்டுக்கல் கொண்டம நாயக்கனூரிலுள்ள தனது தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவரும் அவரது கூட்டாளிகள் 9 பேரும், ஷாஜகானையும், அவரது நண்பர்களையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி 90 லட்சத்தை பறித்துக்கொண்டு, அவர்களது காரிலேயே தப்பி சென்றுள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை