தற்போதைய செய்திகள்

கொழும்பு To சென்னை விமானம் தாமதம்.. இதுதான் காரணமா?

தந்தி டிவி

இலங்கை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் இருந்த இந்திய அதிகாரி கைது செய்யப்பட்டதால், சென்னை வரும் விமானம் தாமதமானது. கொழும்பு கட்டுநாயக்காவில் இருந்து சென்னை நோக்கி விமானம் புறப்பட இருந்தது. இந்திய விமானத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தனது துப்பாக்கியுடன், விமான நிலைய பயணிகள் முனையத்திற்கு வந்துள்ளார். அவரை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து, இருநாட்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தூதரகங்கள் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது. சென்னை புறப்பட இருந்த விமானம் 4 மணி நேரம் தாமதமானது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை