தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு - சதீஷ்குமார் மீதான குண்டர் சட்டம் உறுதியானது

தந்தி டிவி

கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீதான குண்டர் சட்டத்தை, அறிவுரை கழகம் உறுதி செய்தது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி, சத்யா என்ற கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. பொதுவாக குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்கிற்கு குண்டர் சட்டம் உகந்ததா? என சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் அறிவுரை கழகம் விசாரித்து உறுதி செய்யும். அதன்படி மாணவி கொலை வழக்கில் கைதான சதீஷ்குமார் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை, அறிவுரை கழகம் உறுதி செய்து உத்தரவிட்டது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா