தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு - சதீஷ்குமார் மீதான குண்டர் சட்டம் உறுதியானது

தந்தி டிவி

கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீதான குண்டர் சட்டத்தை, அறிவுரை கழகம் உறுதி செய்தது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி, சத்யா என்ற கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. பொதுவாக குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்கிற்கு குண்டர் சட்டம் உகந்ததா? என சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் அறிவுரை கழகம் விசாரித்து உறுதி செய்யும். அதன்படி மாணவி கொலை வழக்கில் கைதான சதீஷ்குமார் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை, அறிவுரை கழகம் உறுதி செய்து உத்தரவிட்டது.

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்