தற்போதைய செய்திகள்

நண்பனை கொடூரமாக குத்தி கொன்ற சக நண்பர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

தந்தி டிவி

பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரகாஷ். இவர் அக்கரப்பாக்கம் பகுதியில் உள்ள மண் குவாரியில், அவருடைய நண்பர் சூர்யா என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், சோழவரம் அருகே தனது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த சூர்யாவை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரகாஷின் பணத் தேவைக்காக சூர்யா தனது அரை சவரன் நகையை கழட்டி கொடுத்தது தெரியவந்தது. இரண்டு வருடம் ஆகியும் நகையை திருப்பி தராததால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டது தெரியவர, சூர்யாவை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்