தற்போதைய செய்திகள்

டிசம்பர் 3-ஆம் தேதி கோவை, திருப்பூர் வழி ரயில்கள் ரத்து

தந்தி டிவி

கோவை, திருப்பூர், சேலம் வழியாக சென்னை, பெங்களூர் செல்லும் ரயில் தடம் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடங்களில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், உள்பட தினசரி 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், டிசம்பர் 3-ஆம் தேதி சேலத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் இந்த வழியாக செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதில் 3 ஆம் தேதி காலை, கோவையில் இருந்து கிளம்பக் கூடிய கோவை- சென்னை இண்டர்சிட்டி ரயில், மறுமார்க்கத்தில் சென்னை- கோவை இண்டர் சிட்டி ரயில், கோவை எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - சென்னை செண்ட்ரல் ஜனசதாப்தி ரயில், கோவை - பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 10 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், ரயில் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை