தற்போதைய செய்திகள்

கோவையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... காதலிக்க மறுத்ததால் இளைஞர் செய்த செயல் - துடிதுடித்த பெண் - பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி
• கோவையில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். • கோவை மாவட்டம், பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். • சில மாதங்களுக்கு முன்பு படிப்பை நிறுத்திய அப்பெண் சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டிராவல்ஸில் வேலைக்கு சேர்ந்துள்ளார். • இந்நிலையில், அப்பெண்ணுடன் கல்லூரியில் படித்த ஸ்ரீ ராம் என்ற இளைஞர், அப்பெண் பணிபுரியும் டிராவல்ஸுக்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். • இதற்கு அப்பெண் மறுக்கவே, தான் வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றார். • இதில் படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஸ்ரீராமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்