தற்போதைய செய்திகள்

கோவையில் பயணியை பாதி வழியில் இறக்கி விட்ட தனியார் பேருந்து - பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்

தந்தி டிவி
• கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு என்பவர், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் உக்கடத்திலிருந்து காளப்பட்டி செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார். • காளப்பட்டிக்கு பயணச் சீட்டு கேட்ட போது, சரவணம்பட்டி வரை மட்டுமே பேருந்து செல்லும் என, ஓட்டுநர் கூறியதாக தெரிகிறது. • இது குறித்து ஓட்டுநரிடம் லோகு முறையிட்ட போது, காளப்பட்டி வரை செல்ல அனுமதி பெற்ற போதிலும், சரவணம்பட்டி வரை மட்டுமே பேருந்து இயக்கப்படுவதாக கூறி பயணிகளை இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. • இது தொடர்பாக, கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், லோகு வழக்கு தொடர்ந்தார். • இதை விசாரித்த ஆணையம், தனியார் பேருந்து உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்