• கோவை குனியமுத்தூர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் நிரஞ்சனா.
• இவர் தனது நண்பர்கள் மூலம் தனியாக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
• இதை நம்பி பட்டதாரிகள் பலரும் லட்சக்கணக்கில் இவரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
• பணம் கொடுத்து நாட்கள் கடந்த பிறகும் வேலை வாங்கி தராமல் இருக்கவே, அவர்கள் அதுகுறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
• நிரஞ்சனாவிடம் சுமார் 9 பேர் 27 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு அவர்கள் கோவை போலீசில் புகார் மனு அளித்தனர்.