தற்போதைய செய்திகள்

சென்னையில் கொக்கைன் விற்பனை - அடுத்தடுத்து சிக்கும் வெளிநாட்டு பெண்கள்

தந்தி டிவி

சென்னையில் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நைஜீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக, அண்ணாநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பிரிஸ்கில்லா தான்சியா என்ற பெண்ணை கைது செய்து, கொக்கைனை பறிமுதல் செய்திருந்தனர். இதனையடுத்து, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததில், மேலும் இரண்டு பெண்கள் உட்பட 3 பேருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதன்படி, அவர்களையும் விசாரித்த போலீசார், பாண்டிச்சேரியில் தங்கி இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த லியோனார்டு என்பவரை கைது செய்து, 12 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனர். இவர், கொக்கைனை மொத்தமாக வாங்கி வந்து, வெளிநாட்டு பெண்களை, வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவர விசாரணை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை