தற்போதைய செய்திகள்

அகதிகள் முகாமில் இருதரப்பினரிடையே மோதல் - இருவருக்கு கத்தி குத்து - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது.

இம்முகாமில் வசித்து வரும் ஒரு மாணவர் சில நாட்களுக்கு முன் தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவர் ஒருவரை அழைத்து வந்து முகாமில் தங்க வைத்துள்ளார்.

நீண்ட நாளாகியும் மாணவன் வீடு திரும்பாததால் முகாமில் இருப்பவர்களுக்கும், மாணவர் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இத்தகராறில் முகாமில் இருப்பவர்களை வெளியே இருந்து வந்து சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த முகாமை சேர்ந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டு இருவரை கத்தியால் குத்தினர்.

இது குறித்து 12 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Telegram Ban | இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை விதித்தது அரசு.. நெட்டிசன்களுக்கு பேரிடி

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி

கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை சம்பவ எதிரொலி.. வடமாநிலத்தவருக்கு வேலை தருபவர்களுக்கு செக்

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்