தற்போதைய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு... திரைப்பட ஒளிப்பதிவாளரை அடித்து கொன்ற கணவன் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

தந்தி டிவி
• மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சரவணமருது என்பவருக்கும், திருவாதவூர் சமத்துவபுரத்தை சேர்ந்த மாலதி என்ற பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. • சக்திவேல் என்பவரை திருமணம் செய்த மாலதிக்கு, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. • இந்த நிலையில், கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சரவணமருது, வீடு திரும்பாததால், அவரது சகோதரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். • அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சந்தேகத்தின் பேரில் சக்திவேலிடம் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்டனர். • அப்போது, மனைவி மாலதியுடன் சரவணமருது தகாத உறவில் இருந்ததாகவும், ஆத்திரத்தில், தனது மாமனார் முருகன் மற்றும் மைத்துனர் ராஜபிரபுவுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். • கொலையை மறைக்க, கீரனூர் கண்மாய் பகுதிக்கு அருகே உடலை புதைத்தாகவும் கூற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். • அதனைத் தொடர்ந்து, சக்திவேல், முருகன், ராஜபிரபு ஆகியோரை கைது செய்த போலீசார், சரவண மருதுவின் உடலை தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்