தற்போதைய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு... திரைப்பட ஒளிப்பதிவாளரை அடித்து கொன்ற கணவன் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

தந்தி டிவி
• மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சரவணமருது என்பவருக்கும், திருவாதவூர் சமத்துவபுரத்தை சேர்ந்த மாலதி என்ற பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. • சக்திவேல் என்பவரை திருமணம் செய்த மாலதிக்கு, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. • இந்த நிலையில், கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சரவணமருது, வீடு திரும்பாததால், அவரது சகோதரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். • அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சந்தேகத்தின் பேரில் சக்திவேலிடம் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்டனர். • அப்போது, மனைவி மாலதியுடன் சரவணமருது தகாத உறவில் இருந்ததாகவும், ஆத்திரத்தில், தனது மாமனார் முருகன் மற்றும் மைத்துனர் ராஜபிரபுவுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். • கொலையை மறைக்க, கீரனூர் கண்மாய் பகுதிக்கு அருகே உடலை புதைத்தாகவும் கூற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். • அதனைத் தொடர்ந்து, சக்திவேல், முருகன், ராஜபிரபு ஆகியோரை கைது செய்த போலீசார், சரவண மருதுவின் உடலை தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்