தற்போதைய செய்திகள்

"ராஜீவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகம் நிதி" - உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு

தந்தி டிவி

நாடாளுமன்றத்தில் தவாங்கில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதல் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்க நேரிட்டது.

அப்போது நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜீவ் காந்தி அறக்கட்டளைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்ட கேள்விக்கு பதிலளிப்பதை தடுக்க காங்கிரஸ் அமளியை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன தூதரகத்தில் இருந்தும், ஜாகீர் நாயக்கிடம் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

2005-07 கால கட்டங்களில் சீன தூதரகத்திலிருந்து ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பாகவும், 2011-ல் ஜாகீர் நாயக் அமைப்பிடம் இருந்து அனுமதியில்லாமல் 50 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பாகவும் காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தினார்.

"Chinese embassy funds Rajiv Foundation" - Home Minister Amit Shah allegesகடந்த அக்டோபர் மாதம் ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு