தற்போதைய செய்திகள்

"ராஜீவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகம் நிதி" - உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு

தந்தி டிவி

நாடாளுமன்றத்தில் தவாங்கில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதல் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்க நேரிட்டது.

அப்போது நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜீவ் காந்தி அறக்கட்டளைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்ட கேள்விக்கு பதிலளிப்பதை தடுக்க காங்கிரஸ் அமளியை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன தூதரகத்தில் இருந்தும், ஜாகீர் நாயக்கிடம் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

2005-07 கால கட்டங்களில் சீன தூதரகத்திலிருந்து ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பாகவும், 2011-ல் ஜாகீர் நாயக் அமைப்பிடம் இருந்து அனுமதியில்லாமல் 50 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பாகவும் காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தினார்.

"Chinese embassy funds Rajiv Foundation" - Home Minister Amit Shah allegesகடந்த அக்டோபர் மாதம் ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை