தற்போதைய செய்திகள்

சீனா - பாகிஸ்தான் நட்பு.. "துரியோதனன்-கர்ணன் நட்பால் குலநாசம்தான்..." - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

தந்தி டிவி

துரியோதனன்-கர்ணன் நட்பால் குலநாசம்தான் என பாகிஸ்தான், சீனாவின் நட்பை ஒப்பிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஜெய்சங்கர் தனது இந்தியாவின் வழி புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது சீனா அசாதரணமான அண்டை நாடு என்ற ஜெய்சங்கர், சீனா சூப்பர் பவரானால் அதன் அருகிலிருப்பது சவாலானது எனக் கூறினார். பயங்கரவாதத்தால் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது என பட்டியலிட்டவர், பாகிஸ்தானை விமர்சித்தார். பாண்டவர்களால் உறவுகளை தேர்வு செய்யமுடியவில்லை என்ற ஜெய்சங்கர், நம்மால் அண்டைய நாடுகளை தேர்ந்தெடுக்க முடியாது எனவும் இயற்கையாவே நல்ல எண்ணம் மேலோங்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். வரம்பு விதிகளை மீறிய துரியோதனன்-கர்ணன் நட்பால் அவர்களுக்கோ, அவர்களது குலத்திற்கோ நன்மை கிடைக்கவில்லை, அவர்கள் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் மறைமுகமாக சீனா, பாகிஸ்தானை ஜெய்சங்கர் சாடினார். 

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்