தற்போதைய செய்திகள்

இரு தரப்பு மோதலாக மாறிய சிறுவர்கள் பிரச்சினை - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுபனையூரில் முன்விரோதம் காரணமாக எழுந்த மாணவர்கள் பிரச்சினை, இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர் குடியிருப்பு பகுதியை கடந்து சென்ற ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள் தக்கா பகுதியைச் சேர்ந்தவரின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

மேலும், ஆதிதிராவிடர்கள்- இஸ்லாமியர்கள் கற்கள் வீசி மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சிறுபனையூர் கிராமத்திற்கு விரைந்தனர்.

பிரச்சினைக்கு காரணமாக சொல்லப்படும் 30க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க சிறுபனையூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"