தற்போதைய செய்திகள்

இரு தரப்பு மோதலாக மாறிய சிறுவர்கள் பிரச்சினை - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுபனையூரில் முன்விரோதம் காரணமாக எழுந்த மாணவர்கள் பிரச்சினை, இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர் குடியிருப்பு பகுதியை கடந்து சென்ற ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள் தக்கா பகுதியைச் சேர்ந்தவரின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

மேலும், ஆதிதிராவிடர்கள்- இஸ்லாமியர்கள் கற்கள் வீசி மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சிறுபனையூர் கிராமத்திற்கு விரைந்தனர்.

பிரச்சினைக்கு காரணமாக சொல்லப்படும் 30க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க சிறுபனையூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்