தற்போதைய செய்திகள்

"ஆளுநர் போட்ட உத்தரவை இல்லாமல் செய்துவிட்டார் முதல்வர்" - திருச்சி சிவா பேச்சு

தந்தி டிவி

பட்டமளிப்பு விழாவுக்கு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்ற ஆளுநரின் உத்தரவை, முதல்வர் ஸ்டாலின் இல்லாமல் செய்துவிட்டதாக எம்.பி.திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் பொது வாழ்வை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என ஆளுநர் உளறியிருப்பதாக விமர்சித்தார். அதனைத்தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கூறியதாகவும், ஆனால் அந்த உத்தரவை முதல்வர் ஸ்டாலின் இல்லாமல் செய்துவிட்டதாகவும் கூறினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு