சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபையின் மீதேறி சாமி தரிசனம் செய்ய முயன்ற பக்தையை கீழே இறங்க சொல்லி தீட்சிதர்கள் வற்புறுத்தியதால் வாக்குவாதம் எழுந்தது.
மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கனக சபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய ஒரு சிலர் முயற்சித்த போது ஜெயசீலா என்ற பக்தையும் அதன்மீதேற முயன்றுள்ளார். தீட்சிதர்கள் கோபமடைந்து அப்பெண்ணை கீழே இறங்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் எழுந்தது. அப்பெண் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே போலீசார் தீட்சிதர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு ஆணைப்படி பக்தர்களை கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை செய்வதாக கூறிச் சென்ற தீட்சிதர்கள் இன்னும் திரும்பாத நிலையில், கோயில் அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளதால் காவல்துறையினர் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.