தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இதுகுறித்த புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் பெற்ற அர்ஜூனா விருதை தன்னிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் உலக அரங்கில் பிரக்ஞானந்தாவின் திறமை மேலும் உயர தமிழக அரசு என்றும் துணைநிற்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.