தற்போதைய செய்திகள்

அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்த தங்கை - சென்னையை அதிர வைத்த சம்பவம் | Chennai

தந்தி டிவி
• பெரம்பூர் சபாபதி தெருவில் வசிக்கும் முனிரத்தினம் என்பவரின் பூர்விக வீட்டின் ஒரு பகுதியை, அதே வீட்டில் மற்றொரு பகுதியில் வசித்து வரும் அவருடைய தங்கை தனலட்சுமி, அவருக்குத் தெரியாமல் எழுதி வாங்கிக் கொண்டதாகத் தெரிகிறது. • இதை எதிர்த்து, முனிரத்தினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. • இந்நிலையில், அதிகாலை உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், முனிரத்தினம் அலறியதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். • சம்பவம் தொடர்பாக திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, முனிரத்தினம் மீது தனலட்சுமி பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த முனிரத்தினம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்