• சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள் இணைந்து ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை இரவு "Hotels in Day" என்ற ராஜ மது விருந்து விழா நடத்துவது வழக்கம்.
• அதன்படி, கடந்த திங்கள்கிழமை இரவு எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் மது விருந்து நடைபெற்றது.
• இதில், பல்வேறு விடுதிகளின் மேலாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
• அப்போது, ரமேஷ் என்ற விடுதி மேலாளரின் பெண் தோழியிடம், போதையில் இருந்த மற்ற விடுதி ஊழியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
• இதை தட்டிக்கேட்ட, ரமேஷ் அவரது நண்பர் தினேஷ் ஆகியோரை 7 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
• பீர் பாட்டிலால் தாக்கியதால், காயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
• இந்நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், 4 பேரை கைது செய்துள்ளனர்.
• மற்றவர்களை தேடி வருகின்றனர்.