தற்போதைய செய்திகள்

சூப்பர்வைசர் பாலியல் தொல்லை.. டீயில் பேதி மருந்து கலந்து கொடுத்த 3 சிறுமிகள் - உரிமையாளர் தாக்கியதால் செய்த செயல்

தந்தி டிவி
• சென்னையை அடுத்த மணலி அருகே 3 சிறுமிகளின் தற்கொலை முயற்சிக்கு காரணமான கடை உரிமையாளர் மற்றும் சூப்பர்வைசரை போலீசார் கைது செய்தனர். • மணலி மாத்தூரை சேர்ந்த 17 வயதான 3 சிறுமிகள்அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர். • அவர்களுக்கு கடை சூப்பர்வைசரான சந்திரசேகரன் என்ற 62வயதான நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. • இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமிகள் சந்திரசேகரனுக்கு டீயில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்ததாக தெரிகிறது. • இது குறித்து தகவலறிந்த கடை உரிமையாளர் செந்தில் குமார் 3 சிறுமிகளையும் தாக்கி வேலையிலிருந்து அனுப்பி விட்டதால் மனமுடைந்த சிறுமிகள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். • அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சூப்பர்வைசர் சந்திரசேகரன் மற்றும் கடை உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு