தற்போதைய செய்திகள்

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் - கேரளா விரைந்த தனிப்படை போலீசார்

தந்தி டிவி
• கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் விசாரணைக்காக, தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளனர். • சென்னை, திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டையில் உள்ள ருக்மணி தேவி கலை கல்லூரியில், கடந்த 2019-ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மாணவி படித்து வந்தார். • தான் படித்த காலகட்டத்தில், கல்லூரியில் நடன உதவி பேராசிரியராக பணியாற்றிய ஹரி பத்மன் என்பவர், தனக்கு பல்வேறு வகைகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகாரளித்துள்ளார். • மேலும், இதன் காரணமாக தான் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் மாணவி குறிப்பிட்டிருந்தார். • இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் ஹரி பத்மன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். • மேலும், மாணவி பயின்ற கல்வியாண்டில், அவருடன் படித்த மாணவிகள் மூன்று பேர் தற்போது கேரளாவில் இருப்பது தெரிய வந்துள்ளது. • எனவே, இந்த வழக்கு தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக, போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்