தற்போதைய செய்திகள்

மோசமான வானிலையுடன் பெங்களூரு..சென்னை வந்த விமானங்கள்..நள்ளிரவில் பரபரப்பு

தந்தி டிவி

கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானம் உள்ளிட்ட 14 விமானங்கள், மோசமான வானிலையால் அங்கு தரையிறங்க முடியாமல் போனது. இதனையடுத்து, அந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கின. இதனால், விமான நிலையத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, பயணிகளுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர், பெங்களூரில் நிலைமை சீரானதும், அனைத்து விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பெங்களூரு புறப்பட்டு சென்றன...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்