தற்போதைய செய்திகள்

விரக்தியில் அடையாற்றில் குதித்த நபர்! சடலமாக மீட்ட பரிதாபம்..வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Chennai

தந்தி டிவி

சென்னை அடையார் மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை, தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

சென்னை அடையாறு மருத்துவமனை அருகே, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் நீருக்குள் குதித்துள்ளார். இதுதொடர்பாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்தனர். பின்னர் நீருக்குள் மூழ்கிய நபரை, ரப்பர் படகு உதவியுடன் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபர், அடையாறு கெனால் சாலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில், சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்