தற்போதைய செய்திகள்

விரக்தியில் அடையாற்றில் குதித்த நபர்! சடலமாக மீட்ட பரிதாபம்..வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Chennai

தந்தி டிவி

சென்னை அடையார் மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை, தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

சென்னை அடையாறு மருத்துவமனை அருகே, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் நீருக்குள் குதித்துள்ளார். இதுதொடர்பாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்தனர். பின்னர் நீருக்குள் மூழ்கிய நபரை, ரப்பர் படகு உதவியுடன் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபர், அடையாறு கெனால் சாலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில், சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்