தற்போதைய செய்திகள்

திருப்பதி லட்டில் மாற்றம் - தேவஸ்தானம் அதிரடி முடிவு

தந்தி டிவி

இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, லட்டு பிரசாதம் தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம், தலைவர் சுப்பாரெட்டி தலைமையில், திருப்பதி மலையில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாரெட்டி, கோடை விடுமுறை காலத்தில் சாதாரண பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளதாகத் தெரிவித்தார். இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அந்த பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். டெல்லியில் உள்ள ஏழுமலையான் கோயிலில், மே மாதம் மூன்றாம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை திருப்பதி மலையில் நடைபெறுவது போல் பிரமோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுப்பாரெட்டி தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்