தற்போதைய செய்திகள்

திருப்பதி லட்டில் மாற்றம் - தேவஸ்தானம் அதிரடி முடிவு

தந்தி டிவி

இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, லட்டு பிரசாதம் தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம், தலைவர் சுப்பாரெட்டி தலைமையில், திருப்பதி மலையில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாரெட்டி, கோடை விடுமுறை காலத்தில் சாதாரண பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளதாகத் தெரிவித்தார். இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அந்த பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். டெல்லியில் உள்ள ஏழுமலையான் கோயிலில், மே மாதம் மூன்றாம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை திருப்பதி மலையில் நடைபெறுவது போல் பிரமோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுப்பாரெட்டி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்