தற்போதைய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தந்தி டிவி
• மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியின் கூடுதல் தவணையை விடுவிக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. • இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப் படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்கிறது. 2023 ஜனவரி 01 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. • அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை ஈடு கட்டும் விதமாக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. • இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரத்து 825 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதனால் 47 லட்சத்து 58 ஆயிரம் மத்திய அரசு பணியாளர்களும் 69 லட்சத்து 76 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்