தற்போதைய செய்திகள்

யாரும் பார்க்காத நேரத்தில் டிவி -யை திருடி பிள்ளைகளிடம் நைசாக கொடுத்த அப்பா - சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 70 ஆயிரம் மதிப்புள்ள டிவியை திருடி பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்பிய தந்தை கைது செய்யப்பட்டார். விளாப்பாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவர் ஆற்காட்டில் உள்ள வீட்டு உபயோக கடை ஒன்றுக்கு சென்று, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய டிவி ஒன்றை பார்த்து பேக் செய்யுமாறு கூறியுள்ளார். பின்னர், ஊழியர்கள் யாரும் பார்க்காத நேரத்தில், டிவியை வெளியே எடுத்துச் சென்று தனது இரண்டு பிள்ளைகளிடமும் கொடுத்து எடுத்து போக சொல்லிவிட்டு, தானும் வெளியேறியுள்ளார். டிவி திருடுபொனதை கண்டுபிடித்த ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு டிவியை திருடிய வினோத்தை கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்