தற்போதைய செய்திகள்

2ஜி வழக்கின் மேல்முறையீடு மனு - டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ கோரிக்கை

தந்தி டிவி
• 2ஜி வழக்கின் மேல்முறையீடு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. • 2ஜிவழக்கு - சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்தார். • இந்த விவகாரம் தொடர்புடைய மேல்முறையீடு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. • அதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், 2 ஜி வழக்கு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்களுக்கு ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டு விசாரணை மே 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்தது. • இதனை தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு மேல்முறையீடு விசாரணை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை