தற்போதைய செய்திகள்

சிக்கிய திமுக நிர்வாகி.."Arrest Him"..அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்

தந்தி டிவி

வடுகபாளையம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சண்முகம். இவரிடம் கடந்த ஆண்டு திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார் வட்டியில்லா கடனாக 5 லட்சம் ரூபாயை ஒருமாத காலத்தில் திரும்பி கொடுப்பதாக கூறி வங்கி காசோலையை கொடுத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ராஜேந்திர குமார் கொடுத்த காசோலையை சண்முகம் வங்கியில் செலுத்திய போது, வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் காசோலை திரும்பியதாகவும், இது குறித்து ராஜேந்திர குமாரிடம் கேட்கையில் அவர் சரியான பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ராஜேந்திர குமார் மீது சண்முகம் கடந்த மார்ச் மாதம் செக் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார். நீதிமன்றம் சார்பில் ராஜேந்திர குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொண்ட போதும், ராஜேந்திர குமார் ஆஜராகாத காரணத்தினால், நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | ரூ.15 லட்சமாக.. பரபரப்பை எகிறவிடும் மத்திய பட்ஜெட்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?

2026 Union Budget | நாடே உற்றுநோக்கும் பட்ஜெட் 2026 - கொண்டாடப்பட்ட `வெற்றி பாரம்பரியம்’