தற்போதைய செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 2 மாதத்துக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை 2 மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதே வேளை வழக்கு விசாரணையை விரைந்து நடத்த அனிதா ராதாகிருஷ்ணன் ஒத்துழைப்பு அளிக்காத பட்சத்தில், இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்யலாம் என்றும் கூறி, மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்த‌து.

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்