தற்போதைய செய்திகள்

சரக்கு..சைடிஷ்க்கு ஊறுகாய்..திருடிய வீட்டிலேயே Party செய்த திருட்டு கும்பல்..

தந்தி டிவி

நாகை அருகே வீடு ஒன்றில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல், நிதானமாக மது அருந்தியதோடு கொள்ளையடித்த வீட்டிலேயே ஊறுகாயை சைடிஷ் ஆக பயன்படுத்திய சம்பவம் போலீசாரை கிறுகிறுக்க வைத்திருக்கிறது...

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஆய்மழை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தன் குடும்பத்துடன் கடந்த 10ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் கோயில் திருவிழாவிற்கு சென்றார். இதனிடையே இவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 4 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைர தோடு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் கொள்ளையடித்த வீட்டில் சாவகாசமாக மது அருந்திய கும்பல், ஃப்ரிட்ஜில் இருந்த ஊறுகாயை சைடிஷ் ஆக தொட்டுக் கொண்டதும் தெரியவந்தது. வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"