தற்போதைய செய்திகள்

சரக்கு..சைடிஷ்க்கு ஊறுகாய்..திருடிய வீட்டிலேயே Party செய்த திருட்டு கும்பல்..

தந்தி டிவி

நாகை அருகே வீடு ஒன்றில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல், நிதானமாக மது அருந்தியதோடு கொள்ளையடித்த வீட்டிலேயே ஊறுகாயை சைடிஷ் ஆக பயன்படுத்திய சம்பவம் போலீசாரை கிறுகிறுக்க வைத்திருக்கிறது...

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஆய்மழை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தன் குடும்பத்துடன் கடந்த 10ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் கோயில் திருவிழாவிற்கு சென்றார். இதனிடையே இவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 4 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைர தோடு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் கொள்ளையடித்த வீட்டில் சாவகாசமாக மது அருந்திய கும்பல், ஃப்ரிட்ஜில் இருந்த ஊறுகாயை சைடிஷ் ஆக தொட்டுக் கொண்டதும் தெரியவந்தது. வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்