தற்போதைய செய்திகள்

3 மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து..மறு அப்பீல் செய்து உறுதியளித்த நிர்வாகம்

தந்தி டிவி

திருச்சி கிஆபெ அரசு மருத்துவக் கல்லூரியில் குறைபாடுகள் களைந்து ஆவணங்கள் அனுப்ப‌ப்பட்டுள்ளதால், அங்கீகாரம் கிடைக்கும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி கிஆபெ அரசு மருத்துவக் கல்லூரியில் ஆதார் பயோமெட்ரிக் கணக்கீடு செய்வதில்லை என்பதால், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், மருத்துவக் கல்லூரி தங்களது தவறுகளை திருத்திக் கொண்டு மறு அப்பீல் செய்ய உத்தரவிட்டிருந்த‌து. அதன் அடிப்படையில் தற்போது ஆதார் பயோமெட்ரிக் பதிவேடுகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சரி செய்துள்ளது. அதற்கான ஆவணங்களை அனுப்பியுள்ளதாகவும், விரைவில் மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை