தற்போதைய செய்திகள்

ஒரு பிரியாணி வாங்கினால் 1 இலவசம்... குவிந்த மக்கள்.. கடுப்பான கலெக்டர் - "பிச்சையா போடுறீங்க.."

தந்தி டிவி

ஒரு பிரியாணி வாங்கினால் 1 இலவசம்... குவிந்த மக்கள்.. கடுப்பான கலெக்டர் - "பிச்சையா போடுறீங்க.. கடையை மூடுங்க.."

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிப்பும் வெளியிட்டது. இதனால் கடை திறக்கப்பட்ட உடனேயே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், 400க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் வரிசையில் குடைபிடித்தபடியும், சிலர் கையால் முகத்தை மறைத்தும் காத்திருந்தனர். காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த ஆட்சியர் குமாரவேல், கடையில் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டதால் சீல் வைக்க உத்தரவிட்டார். விசாரணையில், மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் சான்றிதழை பெறாமல் பிரியாணி கடை செயல்பட்டது தெரியவந்தது. திறப்பு விழா அன்றே கடை மூடப்பட்டதால், சலுகை விலை பிரியாணியை வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்