தற்போதைய செய்திகள்

10 பேரை காவு வாங்கிய கட்டட விபத்து; உயிர் தப்பிய 10 மாத குழந்தை - காப்பாற்றியது கடவுளா?

தந்தி டிவி

ஜோர்டனில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய கைக்குழந்தை ஒன்று 24 மணி நேரம் கழித்து பத்திரமாக மீட்கப்பட்ட பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... தலைநகர் அம்மானில் 4 மாடி கட்டடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது... இதில் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். ஆனால் அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது... உள்ளே சிக்கிக் கொண்ட 10 மாத குழந்தை ஒன்றை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். குழந்தையின் தாய் வெளியில் சென்றிருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்... ஆனால் 10 பேரை பலி கொண்ட கட்டட இடிபாட்டில் 10 மாத குழந்தை உயிர் பிழைத்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்