தற்போதைய செய்திகள்

தம்பியை கொடூரமாக கொன்று உடலை மறைக்க அண்ணன் போட்ட திட்டம் - அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை அருகே சொத்து பிரச்சனையில் தம்பியை கொலை செய்து, கழிவு நீர் தொட்டியில் போட்டு மூடிய அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். • கீழ்குப்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான, ஏழுமலை மற்றும் திருமலையிடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. • இந்த நிலையில் திருமலை ஏழுமலையிடம் வீட்டு பத்திரத்தை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியத்தில், குடிபோதையில் இருந்த ஏழுமலை, தனது தம்பியை தாக்கியுள்ளார். • இதில் திருமலை உயிரிழக்கவே, அவரது உடலை காலியான கழிவு நீர் தொட்டியில் போட்டு மூட ஏழுமலை முயற்சித்துள்ளார். • ஆனால் போதையில் தொட்டியை ஒழுங்காக மூடாததால், உடலை கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். • இதனையடுத்து விசாரணயில் இறங்கிய போலீசார், ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்