தற்போதைய செய்திகள்

தீம் பார்க்கில் மூச்சுத் திணறி சிறுவன் பலி.. "ஐய்யோ என் பையன் போய்ட்டான்.." - மகனின் சடலத்தை விடாமல் கட்டிப்பிடித்து கதறிய தாய்

தந்தி டிவி

சேலத்தில் தனியார் தீம் பார்க்கில், தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித், உஷா தம்பதி தங்களது இரண்டு மகன்களுடன் மல்லூர் அருகே உள்ள தனியார் தீம் பார்க்கிற்கு சென்றுள்ளனர். அப்போது தம்பதியினரின் மூத்த மகன் சௌடேஸ்வரன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். உடனடியாக சௌடேஸ்வரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனின் சடலத்தை பார்த்து அவரின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்ப்போரை கலங்க வைத்தது...

TVK | CM Vijay | டெல்லியில் ராகுல், சோனியாவை சந்திக்காத CM விஜய் என்ட்ரி கொடுத்த காங்., புள்ளி..

BREAKING || Madurai | Quarries | தொடரும் அதிரடி - மதுரையில் 11 கல்குவாரிகள் தற்காலிக நிறுத்தம்

BREAKING | தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் விடுதலையான தஷ்வந்த்..தீர்ப்பை எதிர்த்து இறங்கும் தமிழக அரசு

CM Vijay | TN Govt | TVK | டெல்லியில் இருந்து வந்த கையோடு.. நாளைCM விஜய்யின் அதிரடி திட்டம்

BREAKING || CM பதவியை ராஜினாமா செய்த கையோடு டெல்லி பறக்கும் சித்தராமையா - பிளான் என்ன?