தற்போதைய செய்திகள்

தந்தை, மகள் இருவரும் ஒரே நாளில் வழக்கறிஞராக பதவியேற்பு

தந்தி டிவி

கேரளா உயர்நீதிமன்றத்தில் தந்தை, மகள் இருவரும் ஒரே நாளில் வழக்கறிஞராக பதவியேற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரளா மாநிலம் கொச்சி கக்கநாட்டை சேர்ந்தவர் சுரேந்திரன். இவருக்கு சிறு வயது முதலே வழக்கறிஞராக ஆக வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது.

ஆனால் குடும்ப சூழல் காரணமாக அவரது கனவு நிறைவேறவில்லை என தெரிகிறது. ஆசிரியராக வாழ்வை தொடங்கிய இவர், கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

பின்னர் அவர் தனது மகளுடன் சேர்ந்து பி.ஏ.பி.எல் படிப்பு முடித்து பட்டம் பெற்றார். தொடர்ந்து இருவரும் கொச்சி உயர்நீதிமன்ற பார் கவுன்சலில் பதிவு செய்த நிலையில், தந்தை, மகள் இருவரும் வழக்கறிஞராக உறுதிமொழி எடுத்துக்கொண்டு, வழக்கறிஞராக தங்களது பணியை துவங்கினர்.  

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்