தற்போதைய செய்திகள்

"போரிஸ் ஜான்சனுக்கு 8,00,000 பவுண்ட் ஏற்பாடு செய்த விவகாரம்.." - BBC தலைவர் ராஜினாமா

தந்தி டிவி

பிரிட்டன் அரசுக்கு சொந்தமான, புகழ்பெற்ற தொலைகாட்சி மற்றும் ரேடியோ செய்தி ஒலிபரப்பு நிறுவனமான பி.பி.சி நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 2021 ஜனவரியில் இதன் தலைவராக ரிச்சர்ட் ஷார்ப் பதவியேற்றார். முன்னாள்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 8 லட்சம் பவுண்டுகள் கடன் ஏற்பாடு செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைப் பற்றி

விசாரணை மேற்கொள்ளபட்டு, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திடீரென ராஜினாமா செய்துள்ளார் ஷார்ப். 2020 இறுதியில், சாம் பிளைத் என்ற கனடா நாட்டு குடிமகனை, பிரிட்டன் சிவில் சர்வீஸ் துறையின் தலைவர் சைமன் கேஸிடம், ஷார்ப் அறிமுகப்படுத்தியிருந்தார்.

விவாகாரத்து வழக்கு, மற்றும் புதிய குழந்தை பிறப்பு காராணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த போரிஸ் ஜான்சன், 8 லட்சம் பவுண்டுகள் கடன் பெற பிளைத் ஜாமீன் அளிக்க முன் வந்தது அம்பலமாகியுள்ளது. இந்த தகவலை ஷார்ப் மறைத்து வைத்திருந்தது விதி மீறலாக கருதப்படுகிறது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்