தற்போதைய செய்திகள்

சாகித்ய அகாடமி விருது 2022 "இது கண்டிப்பாக நடக்கும்"- எழுத்தாளர் மு.ராஜேந்திரன் உறுதி

தந்தி டிவி
• டெல்லியில் நடைபெற்ற சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழாவில், காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. • 2022ம் ஆண்டு தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது, எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. • இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள கமானி அரங்கில் நடைபெற்றது. • இதில், சிறப்பு விருந்தினரும் ஆங்கில எழுத்தாளருமான உபமன்யூ சட்டர்ஜி, சாகித்ய அகாடமியின் தலைவர் சந்திரசேகர் கம்பார் ஆகியோர், மு. ராஜேந்திரனுக்கு விருதுக்கான பட்டயத்தை வழங்கினர். • மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி கவுரவித்தனர். • 1801 ஆம் ஆண்டு நடந்த காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட இந்த 'காலா பாணி' நாவல் விரைவில் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளதாக கூறிய எழுத்தாளர் ராஜேந்திரன், விரைவில் திரைப்படமாக வரும் என்றார். • தந்தி டிவிக்கு பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டியை காணலாம்......

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ