தற்போதைய செய்திகள்

எரிந்து கொண்டிருந்த காரில் இருந்து சடலம் மீட்பு.போலீசார் தீவிர விசாரணை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கேரளாவில் எரிந்து கொண்டிருந்த காரில் இருந்து, அடையாளம் தெரியாத சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ரப்பர் தோட்டம் அருகே கார் ஒன்று எரிந்து கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் எரிந்து கொண்டிருந்த காரை அணைத்து, அதில் இருந்த அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டனர். இந்நிலையில், அந்த நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து, காருடன் வைத்து எரித்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்