தற்போதைய செய்திகள்

பண மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் கைது

தந்தி டிவி

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியனின் மகன்களுக்கு மத்திய அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், 11 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாண்டியன், இது குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, தலைமறைவாக இருந்த சுரேஷை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு