தற்போதைய செய்திகள்

பண மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் கைது

தந்தி டிவி

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியனின் மகன்களுக்கு மத்திய அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், 11 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாண்டியன், இது குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, தலைமறைவாக இருந்த சுரேஷை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே