தற்போதைய செய்திகள்

பண மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் கைது

தந்தி டிவி

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியனின் மகன்களுக்கு மத்திய அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், 11 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாண்டியன், இது குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, தலைமறைவாக இருந்த சுரேஷை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்