தற்போதைய செய்திகள்

தெலங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி - முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

தந்தி டிவி

தெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாஜகவினர் பேரம் பேசியதாக கூறி, 3 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், தெலங்கானாவில் சிபிஐ விசாரணை நடத்த அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதனிடையே, முனுகோடே சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், 30க்கும் மேற்பட்ட டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, தெலங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு