தற்போதைய செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகி உட்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு | BJP

தந்தி டிவி

மதுரையில் நீதிபதி இல்லம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகி உட்பட 43 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், மோதலை தூண்டும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிபதி இல்லத்தின் முன்பாக திரண்ட பா.ஜ.க.வினர், போலீஸ் வாகனத்தை மறித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில், நீதிபதி இல்லம் முன்பு அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் மகாசுசீந்திரன் மற்றும் அக்கட்சியினர் 42 பேர் மீது, தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை