தற்போதைய செய்திகள்

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதி - 7,500 வாத்துக்கள் அழிப்பு | kerala | thanthi tv

தந்தி டிவி

கேரள மாநிலம் கோட்டயம் அருகே முண்டாரில் பறவை காய்ச்சல் அச்சத்தால் 7 ஆயிரத்து 500 வாத்துக்கள் அழிக்கப்பட்டன. முண்டாரில் ராமன் என்பவருக்கு சொந்தமான 7 ஆயிரத்து 500 வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட கால்நடை அலுவலர் ஆகியோர் தலைமையில், அனைத்து வாத்துக்களும் அழிக்கப்பட்டன. இதனால் ராமனுகு 14 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து முண்டாரில் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டும் பறவைக் காய்ச்சலால் ராமனின் 7 ஆயிரம் வாத்துக்கள் பலியாகின. இதனால் அவருக்கு 2 ஆண்டுகளில் மட்டும் 28 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை